Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யானைகள் ரயிலுடன் மோதுவதை தடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

#யானைகள்பாதுகாப்பு #ரயில்விபத்து #யானைரயில்மோதல் #புரிந்துணர்வுஒப்பந்தம் #வனவிலங்குபாதுகாப்பு #ElephantProtection #TrainAccidents #WildlifeProtection #SriLankaNews #SriLankaWildlife

புரட்டாதி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்றது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பில், புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, மக்கள் வங்கியின் முழுமையான நிதியுதவியுடன் அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புத் திட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

3 Beam detection, Passive infrared ( PIR ), உணரிகள், தானியங்கி வெப்பநிலை உணரிகள் மற்றும் 20 கிலோகிராமிற்கு மேற்பட்ட விலங்குகள் புகையிரதங்களில் மோதுவதை அடையாளம் காணல் மற்றும் அபாய எச்சரிக்கை (Temper alarm) கட்டமைப்பை இது கொண்டுள்ளது.

புகையிரதப் பாதையின் இருபுறமும் பொருத்தப்படும் சமிக்ஞை விளக்குகள் (சிவப்பு/மஞ்சள்/பச்சை) மற்றும் புகையிரத இயந்திரப் பெட்டிக்குள் நிறுவப்படும் விசேட திரை மூலம் யானை இருக்கும் துல்லியமான இடம் சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் இந்த கட்டமைப்பின் மாதிரிச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயல்முறை, காட்டு யானை விபத்துகள் அதிகம் நடைபெறும் 13 இடங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக எதிர்வரும் மாதம் முதல் செயற்படுத்தப்படவுள்ளதுடன், அத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையத்தளமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை முதல் நானுஓயா வரையான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

104 நவீன மெட்ரோ பேருந்துகள் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தன!

ஆடி 29, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube