Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமயில் குறைந்த விலையில் நெல்கொள்வனவு – விவசாயிகளுக்கு நஷ்டம்

புரட்டாதி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, கிளிவெட்டி, தோப்பூர், வெருகல், சேருவில உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த போகத்தை விட இம்முறை அறுவடை செய்யப்படும் நெல் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் இரண்டு நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற போதிலும், அங்கும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அறுவடை செய்த நெல்லை தனியார் வர்த்தகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

வேளாண்மைச் செய்கைக்கான செலவுகள் முன்னைய காலங்களை விட அதிகரித்துள்ள நிலையில், அதிக செலவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொண்ட போதிலும், கடந்த போகத்தை விட இம்முறை குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்வதுடன், அரசாங்க நெல் களஞ்சியசாலைகள் ஊடாக உடனடியாக நெல் கொள்வனவை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதியினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்புள்ளையில் காலாவதியான குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்தகருக்கு அபராதம்!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறால் ஸ்தம்பித்த புகையிரதம் – பயணிகள் வேறு புகையிரத்துக்கு மாற்றிவிடப்பட்டனர்.

ஆடி 29, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி இன்று!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube