Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோவினால் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு

#எல்நினோ #கடல்வெப்பநிலை #கடல்பாலூட்டிகள் #வனஜீவராசிகள் #கடல்சூழல் #சுற்றுச்சூழல் #ElNino #SeaTemperature #MarineMammals #Wildlife #MarineEcosystem #ClimateChange #SriLanka #Environment #OceanWarming

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எல்நினோ தாக்கங்கள் காரணமாக கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதனால், கடல் பாலூட்டிகள் தங்கியிருக்கும் போஷணைப் பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் நீரோட்டங்களின் தன்மை மாறுபடுவதால், பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் சார்ந்த போஷணைப் பிரதேசங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

தரைக்கடந்த சூழல் அமைப்புகளில் ஏற்படும் வெப்பநிலைத் தாக்கங்களுடன் ஒப்பிடுகையில், கடல் நீரின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் நேரடியாகத் தலையிடுவது கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதை விட, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை முடிந்தவரை விரைவில் வழமைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எல்நினோ நிலைமையினால் பவளப்பாறைகள் வெண்மையாகும் (Coral bleaching) நிலைமை நாட்டைச் சூழப் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

வெப்பக் காலங்களில் பவளப்பாறைகள் வெண்மையாவது பொதுவாக நிகழக்கூடியது என்றும், தற்போது இரண்டு இடங்களில் சிறிதளவில் அத்தகைய நிலைமை பதிவாகியுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இருப்பினும், இதுவரையில் அது கணிசமான அளவிலான அழிவாக மாறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

பவளப்பாறைகள் கடல் நீரின் வெப்பநிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை என்பதால், வெப்பநிலை அதிகரிப்பால் அவை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) மஞ்சுள அமரரத்ன சுட்டிக்காட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

வெருகல் கானக்குயில் வர்ஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் சாட்சியாளர் ஒருவருக்கு பிடியாணை!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல், கம்மன்பில, திலித் ஜெயவீர உள்ளிட்டோர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கோட்டை நீதவான் தீர்ப்பு!

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube