ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சுரேஷ் சாலே குறித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தின் போது உரையாற்றியதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் பசந்த அமரசேன நேற்று (05) தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் பேராசிரியர் மஹிந்த பத்திரண ஆகியோர் 2024 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதவான் அறிவித்தார். இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
