Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஒரு கட்சி நாட்டை உருவாக்க அரசு முயற்சிக்கின்றது – சஜித் பிரேமதாச

புரட்டாதி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு கட்சி நாட்டை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான கால அட்டவணையை அரசாங்கம் தயாரித்துள்ளது. ஆனால் இந்த திருத்தமானது நீதித்துறை சுயாதீனத்தின் மீதான மரண அடியாகும்.

நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும், மக்களின் மனித உரிமைகளை மீறும் மிகவும் கடுமையான ஜனநாயக விரோத செயற்பாடாகவே இது இருக்கின்றது. இந்தத் திருத்தத்தின் ஊடாக மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. வறுமை அதிகரிப்பதற்கும் வேலையின்மை கூடுவதற்கும் இது எந்தத் தீர்வையும் பெற்றுத் தராது.

உண்மையில் இவை எதுவும் நடக்காது. ஒன்றே ஒன்றுதான் நடக்கும். நாட்டில் ஒரு கட்சி ஆட்சியே உருவாகும். ஒரே கட்சி நாட்டை ஆளும், அரச துறையை கட்டுப்படுத்தும் தனிக் கட்சி ஆட்சியை உருவாக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையே இதுவாகும்.

இதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிப்பதுடன், இதனை எதிர்ப்போம். இதற்காக நாட்டு மக்களை அணிதிரட்டுவோம் என குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் மோசடி?

ஆவணி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

திட்வா புயல் நிவாரணம் : எலஹெர பகுதி மக்களுக்கு 400 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கி வைப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கத்தினால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube