Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரீட்சை புள்ளி முறைமையில் அறிமுகமாகும் ‘Weighted Average Marks’ முறைமை – பிரதமர்

புரட்டாதி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான கருத்தியல் ஆவணம் மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கலுக்கான கட்டமைப்பு ஆகிய கொள்கை ஆவணங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி தற்கொலை முயற்சி

ஆடி 20, 2026
இலங்கை

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube