அஸ்வெசும நலத்திட்ட பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி முறையில் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் இடம்பெறுவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், சிலர் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு, பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் அஸ்வெசும பயனாளிகளை தொடர்புகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளின் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் அல்லது வேறு காரணங்களை முன்வைத்து பணம் கோரப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகள் சபையின் அனுமதியின்றி இடம்பெறுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான மோசடி முயற்சிகள் தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய அழைப்புகளை பெற்ற அஸ்வெசும பயனாளிகள், தங்களது பிரதேசத்திற்குரிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் (CID) தகவல் வழங்குமாறும் நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
