தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் இன்று (19) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறித்த மயானத்தின் பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், மயானத்தின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றின் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
