இன்று (20) கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அறிவிப்பின்படி, பகல் வேளையில் மனித உடல் உணரும் வெப்பநிலை சில பகுதிகளில் ‘எச்சரிக்கை நிலை’ (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த எட்டு மாவட்ட மக்களும் போதியளவு நீர் அருந்துவதுடன், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற பணிகளில் ஈடுபடுவதை வரையறுக்கவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
