வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நயினாமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயல்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆயிரம் குளங்கள் வேலைத்திட்டத்தில் நயினாமடு குளம் தெரிவுசெய்யப்பட்டு, அதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கௌரவ R.H. உபாலி சமரசிங்க தலைமையில் வைபவ ரீதியாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்தக் குளத்தின் புனரமைப்பின் மூலம், அப்பகுதி விவசாயிகள் இரண்டு போக நெற்செய்கையை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் B.A. சரத்சந்திரா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் M. ஜெகதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் T. திலகநாதன், கமநல உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் M. அகிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
