2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், இலங்கையிலிருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிதி வெளியேற்றம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
