இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹொங், இம்மாதம் 31ஆம் திகதியுடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இலங்கையில் இருந்து விடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு நேற்று (21) கொழும்பு ஷங்கிரில்லா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களுடன் உரையாடியபோது அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி இலங்கைக்கான சீனத் தூதுவராக பொறுப்பேற்ற கீ ஷென்ஹொங், கடந்த ஆறு ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளார்.
1965ஆம் ஆண்டு பிறந்த அவர், 1996ஆம் ஆண்டு சீனாவின் இராஜதந்திர சேவையில் இணைந்திருந்தார்.
