Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடு ரொஷான் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஆடி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வத்தளை, பள்ளியாவத்தை, கதிரான பாலத்துக்கு அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருப்பு நிற கார் ஒன்றில் வந்த குழுவினர், நிகழ்ச்சி மண்டபத்தில் இருந்த ஒருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதான சுமேத என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றக் குழுவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் குடு ரோஷான் என்பவரின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மண்டபத்தில் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடியவரே துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும், இலக்கு தவறி அங்கு இருந்த மற்றொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார், ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் வாரம் இன்று ஆரம்பம்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியினரின் பூதவுடல் நல்லடக்கம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ தாக்கம் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமடையும்!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் 4 குற்றவாளிகளினதும் மரணதண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube