அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வித் தவணை இன்று (24) நிறைவடைவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் கல்வித் தவணையின் முதற்கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் கல்வித் தவணை ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும், அப்பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வித் தவணையின் முதற்கட்டம் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
