Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளும் காலவரையறை அறிவிப்பு

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை இணையவழியில் மேற்காள்ள முடியும் என்றும், இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை 2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை அதிபர்கள் தமது வலயத்தில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான கல்விப் பிரதி அல்லது உதவிப் பணிப்பாளரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பாடசாலைப் பரீட்சார்த்திகள், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேவையான திருத்தங்களை இணையவழியில் செய்துகொள்ள வேண்டும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அதே இணையத்தளத்திற்குச் சென்று தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களைச் மேற்கொள்ளலாம்.

ஆகஸ்ட் 3 ஆம் திகதிக்குக் பின்னர் மேலும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பரீட்சார்த்திகள், பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கமான 1911, தொலைபேசி இலக்கங்களான 0112784208 அல்லது 0112784537, தொலைநகல் 0112784422 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொள்ளலாம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்!

வைகாசி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

இறக்குவானையில் யானை தாக்குதல்: இருவர் உயிரிழப்பு!

ஆனி 22, 2026
இலங்கை

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழப்பு – அறுவர் மாயம்!

சித்திரை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள 5 கடையறைகளுக்கு திறந்த கேள்வி கோரல்!

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube