நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டும் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையின் ரொஷன் தம்மிக தகுதி பெற்றுள்ளார்.
முதற்கட்டச் சுற்றில் 14.11 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர், தனது சுற்றில் நான்காவது இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்குள் முன்னேறினார். அவர் இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, 71 கிலோகிராம் எடைப்பிரிவு பழுதூக்கல் போட்டியில் இந்திக திசாநாயக்க தோல்வியடைந்ததால் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பு ஒன்றும் முடிவுக்கு வந்தது.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் முதற்கட்டச் சுற்றில் சாமோத் யோதசிங்க மற்றும் தினேத் வீரரத்ன ஆகியோர் தலா மூன்றாவது இடம் பெற்ற போதிலும், இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முடியவில்லை.
அதேநேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியின் முதற்கட்டச் சுற்றில் இலங்கையின் எஃப்.ஏ. மொஹமட் 53 வினாடிகளில் இலக்கை எட்டி தனது சுற்றில் முதலிடம் பிடித்தார்.
