இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போக்களில் குவிந்துள்ள பழைய இரும்புப் பொருட்களை வெளிப்படையான முறையில் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காகக் கோரப்பட்ட விலைமனுக்களின் அடிப்படையில், தகுதியுடைய 09 நிறுவனங்களுக்குச் சுமார் ரூ. 195.89 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் அரச நிறுவனத்திலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக அகற்றப்படுவதுடன் வருமானமும் ஈட்டப்படும்.
