இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான திரு. எம்.ஜே.எஸ்.ரண்சிங்க அவர்களைப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நிரந்தரப் பதவியில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி அளித்துள்ளது.
திரு. எம்.ஜே.எஸ்.ரண்சிங்க அவர்களை பதில் கடமையாகப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு 2025 டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அவர் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாகத் தரமுயர்த்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரைப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நிரந்தரப் பதவியில் நியமிக்கத் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
