இந்த ஆண்டில் இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,091 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காரணமாக 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று (30) புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கம்பஹாவில் 17,850 பேரும், கொழும்பில் 16,716 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேல் மாகாணத்தில் 44,552 பேரும், தென் மாகாணத்தில் 12,656 பேரும் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது 175 டெங்கு அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொசு பெருக்கமடையும் இடங்களை அழித்து தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
