சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் பேரில், இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் துணைப் பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.
மெஹொட்டி ஆராச்சிகே லஹிரு பிரமோத் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், நேற்று (30) நண்பகல் சுமார் 12.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காவல் துணைப் பரிசோதகராக பணியாற்றிய காலத்தில், குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள், முறைப்பாட்டாளர்கள், பிரதிவாதிகள் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணி, வங்கிக் கணக்குகள் ஊடாக சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு, பின்னர் அந்தப் பணத்தை பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக CIABOC தெரிவித்துள்ளது.
