களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிலவும் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெளியிடப்பட்ட அம்பர் நிற எச்சரிக்கை, ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான மழை மற்றும் நீர்மட்ட உயர்வு காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், ஆபத்துகளை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
