Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

மகாவலி ஆற்றுப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மகாவலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அடுத்த 48 மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு நிலை வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (03) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, எதிர்வரும் புதன்கிழமை (05) பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை, தொடரும் மழைக்கான சாத்தியம் மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் வாய்ப்பு காரணமாக வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, கங்கவட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்ன தேரரை காப்பாற்றும் பொலிஸார் – சிறுமியின் பக்க ஆதாரங்கள் வழங்கப்படும் விசாரணையில் மெத்தன போக்கு!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல் கண்காட்சி!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube