சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயத்துடன் பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கெட்டேன்ன மற்றும் கடுகண்ணாவ பகுதிகளுக்கு இடையிலான வீதி இன்று (04) காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக நேற்று குறித்த வீதி மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கிய பாதுகாப்பு அனுமதியின் பின்னர் போக்குவரத்துக்காக வீதி திறக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை 6.00 மணி முதல் குறித்த வீதியில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
