நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதற்கு தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் பேச்சு தரம் தாழ்ந்தது, மலிவானது மற்றும் இழிவானது என விமர்சித்துள்ள குஷ்பு, பொது மேடையில் நடிகை திரிஷா குறித்து அவமரியாதையாக பேசியதற்காக, அவர் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதைப் பார்ப்போம் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் திரையுலக தரப்புகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
