Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வாலிபர் கைது

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கடந்த ஜூலை 31ஆம் திகதி 2 கிராம் 385 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்து, தெல்தெனிய நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி – தென்னேகும்புர பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் 10 கிராம் 795 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தென்னேகும்புர பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

எனினும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் விடுவிப்பதற்காக, வேறொரு நபர் தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்க முயன்றுள்ளார்.

 

இதன்போது, தலைமையக பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கையின் மூலம், இலஞ்சப் பணத்தைக் கொடுக்க வந்த நபர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தினுள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, தென்னேகும்புர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞராவார். அவரிடமிருந்த 5,000 ரூபாய் பணத்தாள்கள் 100 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்ட விதிகளின்படி மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

பஹ்ரைன், குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் – 85 இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு!

ஆடி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து; பாதசாரி பலி!

ஆடி 8, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ட்ரோன்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம்

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தது – இன்னோவேட்டிவ் புரொடக்‌ஷன் குரூப்

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube