இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்த 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, காயமடைந்த கைதிகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
