போலிப் பணத்தாள்களை அச்சிட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) மிரிகான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டே வீதிப் பகுதியில் மேல் மாகாண தெற்கு திசா குற்றத்தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல் தொடர்பு மையம் (Communication Centre) ஒன்றினுள் போலி முறையில் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நோராவார்.
சந்தேகநபர் குறித்த தகவல் தொடர்பு மையத்தின் உரிமையாளர் என்பதோடு, அவரிடமிருந்து 5,000 ரூபாய் போலிப் பணத்தாள்கள் 07, 1,000 ரூபாய் போலிப் பணத்தாள்கள் 06, 500 ரூபாய் போலிப் பணத்தாள் 01, கணினி 01, ஸ்கேனர் 01, பிரிண்டர் 01, பென்டிரைவ் 01, பேப்பர் கட்டர் 01 மற்றும் அடிமட்டம் 01 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
