ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது.
இம்முறை 294,089 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழி மூலத்திலும், 73,723 பேர் தமிழ் மொழி மூலத்திலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிலையங்களுக்கு வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் வினாத்தாள் காலை 9.30 முதல் 10.45 மணி வரையும், முதல் வினாத்தாள் காலை 11.15 முதல் பிற்பகல் 12.15 மணி வரையும் நடைபெறவுள்ளது.
கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் ஏனைய மின்னணு சாதனங்களை பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
