மத்திய மலைநாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, சாமிமலை – ஸ்டொக்ஹோம் பிரிவிலுள்ள லயன் குடியிருப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்சரிவு மற்றும் பலத்த காற்றினால் வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்துள்ளதால், 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பாடசாலை மாணவர்களும் தோட்டத் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.
இந்நிலை தொடர்பில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
சேதமடைந்த வீடுகளை விரைவாகச் சீரமைத்து, பாதுகாப்பான வாழ்வாதார சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
