அக்கிமீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி–உடுகம வீதியின் கல்கொடதேணிய சந்திக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து நிறுத்துமிடத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அக்கிமீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
