கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற பாரவூர்தி பொருட்களை இறக்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த பாரவூர்தி அதன் பின்புறத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பின்னால் வந்த பாரவூர்தியின் உதவியாளரான 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
