Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பது பொதுநலனுக்காகவே – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

ஆவணி 13, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாறாக, நாட்டின் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நீதித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்துள்ளார்.

May be an image of text

நீதியை நிலைநாட்டும் செயற்பாடு நீதிமன்றங்களால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணைகள், வழக்குத் தாக்கல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சட்ட மாஅதிபர் திணைக்களம், கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இலங்கை காவல்துறை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

May be an image of one or more people and text

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் இலகுவாக அணுகக்கூடிய வகையில் அதன் நடவடிக்கைகளை மாகாண மட்டத்திலும் முன்னெடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No photo description available.

இதனிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடித்தல் உள்ளிட்ட விடயங்களில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து, பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தச் சீர்திருத்தங்கள் நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் கட்டமைப்புசார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பரந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடோ அல்ல எனவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் காயம்!

ஆனி 10, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புதிய வணிக வளாகத்திற்கான அமைவிட மாற்றம் கோரி நெடுங்கேணி மக்கள் வலியுறுத்தல்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

வெப்பநிலை தொடர்பான அறிவிப்பு!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube