கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 40 வயதுடைய பெண்ணொருவரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரைக் கண்டதும் கட்டிடங்களின் மாடிகளுக்கிடையே பாய்ந்து தப்பிச் செல்வதால், அப்பகுதி மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ என அழைக்கப்பட்ட குறித்த பெண், நேற்று (13) மாலை மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யும் போது மாடிகளுக்கிடையே தப்பிச் செல்ல முயன்றதில் அவரது கால் முறிந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
