மட்டக்களப்பில் 1990ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க துறவி அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36ஆவது நினைவேந்தல் இன்று நடைபெற்றது.
சென் மிக்கேல் தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், அருட்பணி ஹெர்பர்ட் அடிகளார் மற்றும் அவருடன் காணாமல் ஆக்கப்பட்ட மாணவன் பெர்ட்ரம் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாவிக்கரை பூங்காவுக்கு அருகிலுள்ள நினைவுத்தூபியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட யேசு சபைத் துறவிகள், தேவாலயங்களின் அருட்தந்தையர்கள், பழைய மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, மனித உரிமைகள், அமைதி மற்றும் சமூக நீதிக்காக அருட்பணி ஹெர்பர்ட் அடிகளார் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டதுடன், அவரது தியாகம் மனிதநேயத்தின் உயரிய எடுத்துக்காட்டாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
