இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள லிட்டில் கார்டன் பாடசாலையில், வீட்டுப்பாடத்தைச் செய்யாததற்காக அனுராதா என அடையாளம் காணப்பட்ட ஆசிரியை, பிரணய் தேஜா என்ற 6 வயது சிறுவனைத் திட்டி, கன்னத்தில் அறைந்ததால், அவன் வகுப்பறையிலேயே உயிரிழந்துள்ளார்.
ஆசிரியை மாணவனை கன்னத்தில் அறையும் காட்சியும், மாணவன் வகுப்பறையிலேயே மயங்கி விழும் காட்சியும் பாடசாலை CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
மற்ற ஆசிரியர்கள் அவனை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முயன்று, கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றுள்ளனர். எனினும் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக்கு காரணம் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அத்துடன் மாணவனுக்கு முன்பே ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருந்ததா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது, மேலும் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது.
இந்தக் காணொளியைப் பார்த்த பெற்றோர்களும் உறவினர்களும், ஆசிரியை மற்றும் பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக நீதி கோரி, பாடசாலை மற்றும் மருத்துவமனைக்கு முன்பாக கூடியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
