அமெரிக்க விமானம் தாங்கிப் போர் கப்பலான ஐஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன், அரபிக்கடலை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளைக் குழு இதனை தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கப்பலான ‘ஐஎஸ்எஸ் லிங்கன்’ கப்பலில் நிலவிய மோசமான சூழ்நிலைகள் குறித்த முறைப்பாடுகளை தொடர்ந்தே புதிய கப்பல் அரபிக்கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் சான் ஏசியாகோவிலிருந்து புறப்பட்ட ‘ஐஎஸ்எஸ் லிங்கன்’ கப்பல், போர்க் காலத்தில் நீண்ட நாட்கள் துறைமுகம் செல்லாமல் கடலிலேயே நின்றதன் காரணமாக,உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறை நிலவியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், கப்பலில் உள்ள சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், கடுமையான மன உளைச்சல் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
