Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி

#முல்லைத்தீவு #சிறுவர்_பாதுகாப்பு #சிறுவர்கள் #பேரணி #குழந்தைகள்_உரிமைகள் #ChildProtection #ChildrensRights #Mullaitivu #SriLanka #Awareness

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (27) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடும் நடைபெற்றுள்ளது.

“எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்ரி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல் மற்றும் ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.

சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய பேரணி, முல்லைத்தீவு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்றது.

இதன்போது சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பேரணியின் நிறைவில், சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரிலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பிரதிநிதிகள், சிறுவர் பாதுகாப்புப் பொலிஸ் அதிகாரிகள், சிறார்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள 5 கடையறைகளுக்கு திறந்த கேள்வி கோரல்!

ஆனி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

யுக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி அனுர!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube