இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு அங்கமாக, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளையினரால் இன்று (02) பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாததை சுட்டிக்காட்டியே குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையின் கல்விக்கான கனவை அழிக்காதே, கல்விசார் பணியாளர்களின் பற்றாக்குறைக்கு உடன் தீர்வு காணுங்கள், கல்விக்கான நிதியினை அதிகரிக்கவும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்கவும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
