அம்பத்தலை – தெஹிவளை நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்புப் பணி காரணமாக இன்று (05) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பத்தரமுல்லை, தியத்த உயன பகுதிக்கு அருகில் அம்பத்தலை – தெஹிவளை நீர் விநியோகக் குழாயில் ஏற்படும் அவசர பராமரிப்புப் பணிகள் இன்று (05) 11:30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
இதற்கமைய, நுகேகொடை, கொஹுவளை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இந்திபெத்த, கட்டுபெத்த, கல்கெமுல்ல, கொடகாமுல்ல (Modara), கொரளவெல்ல, எகொடோயான மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றவட்ட வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 1939 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
