மாத்தளை, உக்குவெல பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார ் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் உக்குவெல, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையிலேயே மகன் கூர்மையான ஆயுதத்தால் தந்தையைத் தாக்கி கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
