கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு, தெமட்டகொடை மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று காலை 10.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இரண்டு பயணப் பொதிகளில் ஐந்து பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
