புதையல் தோண்டும் நோக்கில் காணியொன்றில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட மூவர் நேற்று (10) புலத்சிங்கள பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலத்சிங்கள- போதலேகம பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட புலத்சிங்கள மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
