மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) 67 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஆம்பர்கிரிஸ் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு கடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில், 67 கிலோகிராம்களுக்கும் அதிகமான திமிங்கில ஆம்பர்கிரிஸ் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆம்பர்கிரிஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
