அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (17) கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கினிகத்தேன பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கினிகத்தேன பொது பேருந்து நிலையம், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய சுத்திகரிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தவிசாளர் கப்பில நாகந்ந, பொதுமக்கள் பொலித்தீன் மற்றும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பயன்பாட்டுக்கு உதவாத பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை பிரதேச சபையின் சேகரிப்பு வாகனங்களுக்கு ஒப்படைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
