Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“கோட்டா கோ கம” மே 9 வன்முறை நஷ்டஈடு தொடர்பில் கோட்டபயவுக்கு நோட்டீஸ்!

Gota Go Gama | Gotabaya Rajapaksha | SriLanka | QuickTamilNews

வைகாசி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2022 ஆம் ஆண்டு மே 9 வன்முறையின் போது தனது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி, சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டது.

அடிப்படை உரிமை மீறல் மனுத் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நோட்டிஸ் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முன்னதாக பல சந்தர்ப்பங்களில் இவருக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அந்தச் செயல்முறையை மீண்டும் முறையாகப் பூர்த்தி செய்யுமாறு உயர் நீதிமன்றம் பணித்துள்ளது.

2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அப்போதைய ஆளுங்கட்சியான மொட்டுக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு தீக்கிரையாக்கப்பட்டன.

இவ்வாறு சேதமடைந்த சொத்துக்களுக்கு அரச நிதியிலிருந்து நட்டஈடு வழங்க அப்போதைய அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

அமைச்சரவையின் இந்தத் தீர்மானமானது சட்டவிரோதமானது எனவும், இது பொதுமக்களின் வரிப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் எனவும் தெரிவித்தே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நட்டஈடு வழங்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும், சட்டத்துக்குப் புறம்பாக நட்டஈடு பெற்ற அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்டு அரசாங்கத்திடம் வழங்குவதுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து சோதனை – பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube