கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 190 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ரூ. 196,119,425 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் சுமார் 520,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.
ஏப்ரல் 10 ஆம் திகதி ஒரே நாளில் மாத்திரம் அதிகபட்ச வருமானமாக 5.9 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை பதிவாகியுள்ளது
