15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
