ஹட்டன் – சாமிமலை மற்றும் மஸ்கெலியா தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து ஓட்டுநர், மற்றும் நடத்துனர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர்.
இந்த வழிகளில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. பேருந்து நடத்துனர் டிக்கெட் வழங்க வேண்டியது நமது நாட்டில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகள் கட்டணம் செலுத்திய பிறகும், நடத்துனர்கள் டிக்கெட் வழங்குவதில்லை. மேலும் பேருந்துகளில் அதிக மக்களை ஏற்றிச்செல்வது, சனநெரிசலில் பயணிக்க வேண்டிய கட்டாய நிலைமைகள்,பாடசாலை மாணவர்களை புறக்கணிப்பது என பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு பேருந்து உரிமையாளர்களுக்கும், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உண்டு. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தயவுசெய்து இதில் தலையிட்டு, அனைத்துப் பயணிகளுக்கும் டிக்கெட் வழங்குவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்குமாறும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஹட்டன் – சாமிமலை மற்றும் மஸ்கெலியா பிரதேச மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
