ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், ரமல்லா நகருக்கு அருகில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில், 15 வயதுடைய பாலஸ்தீனச் சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்-பிரேஹ் (al-Bireh) பகுதியில் உள்ள உம் அல்-ஷராயித் சுற்றுப்புறத்திற்குள் இஸ்ரேலியப் படையினர் நுழைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அமீர் அஹ்மத் ஜவாத் ஜாபர் என்ற 15 வயதுச் சிறுவன் தலை மற்றும் மார்பில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
