கண்டி மாநகர சபையால் செயற்படுத்தப்படும் திண்மக் கழிவகற்றல் வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மாநகர சபையின் கழிவு தரம் பிரிக்கும் கொஹாகொடை மத்திய நிலையத்தில் உள்ள ஒரு இயந்திரம் செயற்படாத காரணத்தால் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் மிகவும் சுத்தமான நகரங்களில் ஒன்றான கண்டி நகர் ஒரு புனித நகரமாகும். உள்ளூர், வௌியூர் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை தரும் இடமாக கண்டி விளங்குவதால், நகரின் தூய்மையை பேணுவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
